April 22, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : விசாரணை வேண்டும் என்கின்றார் சாணக்கியன்

அசாத் மௌலானாவின் கருத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது என அவரது முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானாவின் கருத்து தெரிவித்திருந்தார் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். 4 ...

மேலும்..

செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு –முற்றிலும் புதிய கல்வி முறை – வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்கள் – ஜனாதிபதி கருத்து

செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை இந்த தொகையை எங்களால் செலவு செய்ய முடியுமா ...

மேலும்..

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்கள் – வேலன் சுவாமிகள்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு ...

மேலும்..

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு – ஓமல்பே சோபித தேரர்

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்துவேன் – பீரிஸ் : எதிர்கொள்ளத் தயார் – சாகர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாகும் தன்மை ஆகியவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு அறிவித்துள்ளார். கட்சி யாப்புக்கு அமையவே பொதுச்சபை ...

மேலும்..

யாழில் நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!

கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது. அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் ...

மேலும்..

மைத்திரி – ரணில் பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களான மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும். தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதால் தான் அடிப்படைவாதிகள் தமது தாக்குதலுக்கு இலங்கையை தெரிவு செய்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில், ரமழான் நோன்பு காலம் முடிந்த பிறகு உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல் ...

மேலும்..

உயர்வு தாழ்வுமின்றி மனிதநேயத்தை ரமழான் நோன்பு போதிக்கிறது – இ.தொ.கா தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

புனித ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில், இஸ்லாத்தின் புனித நூலான ...

மேலும்..

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

"பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில், பொருளாதாரம் மேம்பட்டு - பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ...

மேலும்..

முட்டாள் அரசியல்வாதிகள்- பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கடும் சாடல் – பதவி விலகப்போவதில்லை என தெரிவிப்பு

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானகரத்நாயக்க நாடு எதிர்கொண்டுள்ள மின்சார நெருக்கடிக்கு முட்டாள் அரசியல்வாதிகளே காரணம் என தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது உருவாகிவரும் சூழ்நிலை அரசியலில் ஈடுபடுவது குறித்து தான் சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்தமைக்காக பொதுப்பயன்பாட்டு ...

மேலும்..

சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – ரிஷாட் பதியுதீன்

நோன்புப் பெருநாளின் சௌபாக்கியங்கள் சகல முஸ்லிம் சகோதரர்களதும் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தப் பிரார்த்தித்து, வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “இறையியல் ...

மேலும்..

வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெறுபவரா நீங்கள் – தேசிய வருமான வரித் திணைக்களத்தின் அறிவிப்பு

வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக ...

மேலும்..

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்த இறுதித் தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – திஸ்ஸ அத்தநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆராயவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை ...

மேலும்..

4 நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார் – சம்பிக்க அதிரடி அறிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்துமாயின் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார். பொது கொள்கை இல்லாமல் தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால் அரசியல் நெருக்கடி தீவிரமடையுமே தவிர குறைவடையாது என 43 ஆவது படையணியின் தலைவரும், நாடாளுமன்ற ...

மேலும்..

தேசிய பாதுகாவலனாக கோட்டாவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் ஏமாந்துள்ளனர் – சம்பிக்க

தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவுசெய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ...

மேலும்..

உயிரிழந்த சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறியுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை

ரம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டமையை சட்ட விரோதமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு, சம்பவ தினத்தன்று ...

மேலும்..