இந்திய மின்சக்தி அமைச்சரை சந்தித்தார் மிலிந்த மொறகொட!

இந்தியாவின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீராஜ்குமார் சிங்கிற்கும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இராமாயணத்தின் படி சீதை சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று நம்பப்படும் இலங்கையின் சீதாஎலியாவில் கோயிலுக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து பெறப்பட்ட கல்லொன்றை உயர்ஸ்தானிகர் மொரகொட இந்திய அமைச்சர் சிங்கிற்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுடனான மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் இந்த சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.