நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை
_________________________________________________
வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று மாலை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை