பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரியில் வறுமை நிலையில் வாடும் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைகளை ஊக்குவித்து வருகிறார்.அதன் முதற்கட்டமாக கடந்த 19/06 ஞாயிற்றுக்கிழமை “எமக்கான மரக்கறிகளை நாமே உற்பத்தி செய்வோம்” எனும் கருப்பொருளில் சாவகச்சேரி நகர் மற்றும் கல்வயல் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 30குடும்பங்களுக்கு மரக்கறி வகைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான பொலித்தீன் பைகள்,நாற்றுக்கள் மற்றும் விதைகளை வழங்கி வைத்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை