ரெலோவிற்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். ற்கும் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது? – ஆனந்தசங்கரி கேள்வி

விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டாம் எனப் போராட்டம் நடத்திய ரெலோவும், விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்ற ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினருக்கும் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், காலம் கடந்தாலும் சுமந்திரன் உண்மைகளை தற்போது வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களாக அமைந்தாலும், சம்பந்தன் தொடர்பாக அவர் உண்மைகளை காலம் கடந்தாலும் வெளிப்படுத்தியுள்ளார் அதனை பாராட்டியே ஆகவேண்டும். சம்பந்தன் கூறும் அத்தனைக்கும் தலை அசைத்துவந்தாலும், தொடர்ந்தும் அவருடன் பயணிக்க முடியாது என்ற நிலை சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை சுமந்திரன் 6 ஆண்டுகளிற்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். ஆனாலும் தற்போது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளமை பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்.பினர் கருத்துக்கள் தெரிவிப்பது தற்போதுள்ள நிலையில் தமது சுயலாபத்திற்காகவே என்றும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.