வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள் …
வவுனியா நிருபர்.
வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (05.08.2020) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாலை 6.00 மணி தொடக்கம் எடுத்துக்கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வவுனியா மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏ9 வீதி மாவட்ட செயலகத்திலிருந்து சுற்றுவட்டம் (வைத்தியசாலை முன்பாகவுள்ள) வரையான வீதியும் மூடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தில் தற்போது நூறுக்கு மேற்பட்ட பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.<
/div>
கருத்துக்களேதுமில்லை