பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புடைசூழ தேரேறி வந்தான் சந்நிதியான்! (photos)

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காலை 8 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோஹரா’ கோசத்துடன் வடம் பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக் கந்தன் அலங்காரத்துடன் இரதோற்சவத்தில் வலம் வந்த காட்சிகளைப் படங்களில் காணலாம்.

நாளை காலை 6 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும், மாலை 6 மணிக்கு மெளனத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.