கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு 24.12.2020 இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபோது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் ஆலயபரிபாலனசபையின் ஒத்துழைப்புடன் கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் பிரதமகுரு பிரதம குரு சிவ ஸ்ரீ இராஐசிங்கக்குருக்கள்,
உதவிக் குரு சிவ ஸ்ரீ சபாரெத்தினக்குருக்கள், விசேட கிரிகை இந்து குமார் ஒன்றிய தலைவர் சிவ ஸ்ரீ கணேச லோகநாதக்குருக்கள் தலமையில் கிரிகைகள் யாவும்  அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர், கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.