ஆவரங்கால் சமுர்த்தி வங்கி அங்கஜன் எம்.பியால் கணனி மயப்படுத்தி வைப்பு !

யாழ் மாவட்டத்தில் முன்னோடியாக திகழ்ந்த ஆவரங்கால் சமுர்த்தி வங்கி உத்தியோக பூர்வமாக கணனி மயப்படுத்திப்பட்டு பாவனையாளர் மயப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வினை செயற்பாட்டு ரீதியாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன்  இன்று (24) ஆரம்பித்து வைத்தார்.
 யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், சமுர்த்தி வங்கிகளின் யாழ் மாவட்ட பணிப்பாளர்,வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.