ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளும் நேர்முகப்பரீட்சை

[வி.சுகிர்தகுமார்]

  அரச தொழிலில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்றது.

இந்நேர்முகப்பரீட்சையானது உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன்  சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி. ரவிச்சந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சந்திரசேன உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

முன்னதாக ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளை ; இணைத்துக்கொள்ளும்போது தவறவிடப்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நேர்முகப்பரீட்சையில்; கல்வி சான்றிதழ் மற்றும் தகைமைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் விரைவில் இவர்களுக்கான நியமனங்களும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.