முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்த அறிவிப்பு !

வரலாற்று சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

சிலாபம் பிரதேச செயலாளர் பி.டபிள்யூ.எம்.எம். எஸ் பண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தெதுறு ஓயாவில் இடம்பெறும் தீர்தோற்சவ நிகழ்வுடன் வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளது.

இலங்கையின் வடமேற்புலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்வாமி ஆலயம் பழமையும் தொன்மையும் மிகுந்த ஆலயமாகும்.

மூர்த்தி தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கமைத்து சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.