இலங்கை செய்திகள்

மன்னிப்பு கோரினார் சுமண ரத்ன தேரர்!

தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் ...

மேலும்..

முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக இலங்கை மின்கட்டண வரி அதிகரிப்பினால் மாறுகின்றது! திலும் அமுனுகம சாட்டை

அதிகரித்த மின்கட்டணங்கள்  வரிகள் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செலவுகள் மிகவும் அதிகரித்து  செல்வதால் இலங்கை முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக மாறிவருகின்றது என ...

மேலும்..

குவியலாக வீழ்ந்துகிடந்த பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் நபர்! மாத்தறை இலங்கை வங்கியில் சம்பவம்

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை மாலை வீழ்ந்து கிடந்த 50 லட்சம் ரூபா பணத்தை மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரான சந்தன உதயங்க (வயது - 38) என்பவர் கண்டெடுத்து அதனை ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்குப் பதில் சொல்வோம்! சிறிதரன் எம்.பி. எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களால் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

திருகோணமலை IOC க்கு நிர்மலா சீதாராமன் விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் (IOC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் ...

மேலும்..

விவசாயிகளுக்கு நட்ட ஈடு!

திருகோணமலை மாவட்டத்தில்  வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று(02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிதாக விவசாய ஓய்வூதிய ...

மேலும்..

மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்-நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ”நாம்-200″ நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை மலையக மக்களுக்கான இந்திய ...

மேலும்..

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த யாழ்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே  இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சம்பந்தன் குறித்து பெரிதாக அலட்டத் தேவையில்லையாம்! அமைச்சர் டக்ளஸ் ‘அற்வைஸ்’

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார். இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற கருத்து தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு ...

மேலும்..

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்புரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

மேலும்..

ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுனியாவில் பிரதமர் தலைமையில் நடந்தது

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 'ஒரே கிராமம் ஒரே நாடு' கலந்துரையாடல் வவுனியாவில் இடம்பெற்றது. 'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17 ஆவது கலந்துரையாடல் புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ...

மேலும்..

ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரி அதிபராக எஸ்.ராஜன் நியமிப்பு!

ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் புதிய அதிபராக நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய சித்திரன் ராஜன் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். புசல்லாவையை பிறப்பிடமாகக்கொண்ட இவர் பொகவந்தலாவை கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் சென் மேரிஸ் கல்லூரி மற்றும் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம் மேற்கொண்டார் நிர்மலா சீதா ராமன்!

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் குறித்த ...

மேலும்..

மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தல்கள் ஆரம்பம் மட்டக்களப்பில் நடந்தது

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பின் பிரதான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தரவை மாவீரர் ...

மேலும்..

‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின்‘ கிளையை திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் திருகோணமலைக் கிளையை‘ இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உட்பட ...

மேலும்..