இலங்கை செய்திகள்

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தகோரும் கோரிக்கை மனு ஐ.நா. அலுவலகத்தில் கையளிப்பு!

  நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு அமைந்த கோரிக்கை மனுவை புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ஸிடம் சிறிதரன் எம்.பி. கையளித்தார். இலங்கைத் தீவில் நீதித்துறை மீது அரச நிர்வாகத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக ...

மேலும்..

தப்போவ சரணாலயத்தில் வேட்டைக்குச் சென்ற நான்கு பேர் கைது

தப்போவ சரணாலயத்தில் வேட்டைக்குச் சென்ற நான்கு பேர் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்போவ சரணாலயத்தின் கம்பிரிகஸ்வெவ பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வர் வில்பத்து விலங்கு அலுவலகத்துக்கு உரித்தான நீலபெம்ம வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் நேற்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ...

மேலும்..

உலக வங்கியின் ஆதரவுடன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி

இலங்கையில் உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 90.98 கிலோமீட்டர் நீளமான வீதி வேலை திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி இராஜாங்க ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான அபுஹிந் தொடர்பான தகவல்களை வெளியிடத் தயார் – ஹரீஸ் எம்.பி, சபையில் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையோ நம்பகத்தகுந்த விசாரணை ஒன்றோ இடம்பெறுமாக இருந்தால் தாக்குதலின் சூத்திரதாரியான அபுஹிந் தொடர்பான தகவல்களை வெளியிட நான் தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற துறைமுக ...

மேலும்..

நிட்டம்புவ, குளியாப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 35 பேர் காயம்

நிட்டம்புவ மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு விபத்திலும் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான இரு பஸ் வண்டிகளே விபத்திற்குள்ளாகியுள்ளன. இருவேறு விபத்துகளிலும் 15 பாடசாலை மாணவர்கள் உட்பட 35 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். நிட்டம்புவ ...

மேலும்..

மீரிகம – நீர்கொழும்பு வீதியில் கோரவிபத்து! சாரதி உயிரிழப்பு

மீரிகம - நீர்கொழும்பு வீதியில், கொட்டதெனிய, வெலிஹிந்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பஸ் சாரதி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இன்று வெள்ளிக்கிழமை (06) காலை மணல் ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று மோதி விபத்துள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் ...

மேலும்..

மைத்திரியின் கார் மீது விழுந்த அதிவேக நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கேட் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வானத்தின் மீது சுங்கச்சாவடி கேட் விழுந்த சம்பவம் குறித்து வி.ஐ.பி பாதுகாப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணம் செய்த போது இந்த சம்பவம் ...

மேலும்..

தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாய் பரிசு : இலங்கை கிரிக்கெட் சபை

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாயை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 19 வயதான அவர், சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் ...

மேலும்..

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். UPDATE : கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 17 பேர் வரை ...

மேலும்..

கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில் இவ்விபத்தினை ஏற்படுத்திய தனியார் ...

மேலும்..

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்கு நற்செய்தி!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை மாவட்டத்தில் 2113 குடும்பங்களைச் சேர்ந்த 8591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை ...

மேலும்..

சார்ஜன்ட் ஹனீபா மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குக! ரிஷாத் பதியுதீன் வலியுறுத்து

  பொலொன்னறுவை, வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் எமது கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் ...

மேலும்..

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதி உள்ள அறிவும் ஆரோக்கியமும் நூல் வெளியீடு!

  அபு அலா - நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய 'அறிவும் ஆரோக்கியமும்' என்ற நூல் வெளியிட்டு விழா கடந்த புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

தேரர்களால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் ...

மேலும்..

‘நாய்’ என திட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் : சபையில் சீறிய டயானா கமகே

நாடாளுமன்ற சிறப்புரிமையை எழுப்பி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் கடும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சபையில் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது ...

மேலும்..