இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ; ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்  சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ...

மேலும்..

நாமலின் திருமணத்திற்கான 26 இலட்சம் ரூபா மின்கட்டணத்தை செலுத்திய நபர் !

சர்ச்சைக்குரியதாக கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியான ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில் சுமார் ...

மேலும்..

‘ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்’ நூல் வெளியீட்டுவிழா

சட்டத்தரணி எ.பி.கணபதிப்பிள்ளை எழுதிய ‘ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்‘ என்ற நூல் வெளியீட்டு  விழா ஹட்டனில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மலையக மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கில மொழியில்  “Climpses of a Tea Bud”  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் டியு குணசேகர மற்றும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக்  கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்..

நாட்டின் நீதித்துறையில் ஊழல்கள் காணப்படுகின்றன!

இலங்கையின் நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நடைபெற்ற “ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் ...

மேலும்..

ஒரே வீதியில் சில மாதங்களில் 5 முச்சக்கரவண்டிகள் தீப்பற்றி எரிந்தன : கம்பளையில் சம்பவம்!

கம்பளை நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது. தம்பதிகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்திலிருந்து  இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர். அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு ...

மேலும்..

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் தேரர் போல் நடித்து பண மோசடி செய்தவர் நுவரெலியாவில் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மல்வத்து மகாநாயக்க தேரரைப் போல் பேசி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக போலியான தகவல்களை வழங்கிய நபர் ஒருவரை  நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியா பகுதியில் வசிக்கும் ...

மேலும்..

நாட்டின் ஐம்பது வீதமான மக்கள்; விடுதலைப்புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர்- கெமுனுவின் கண்டுபிடிப்பு

நாட்டின் ஐம்பது வீதமான மக்கள்; விடுதலைப்புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு நாளாந்தம்  ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் என இலங்கை தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ் அமைப்புமே தற்போது அதிகளவு நிதியை பெறும் பயங்கரவாத அமைப்புகள் என ...

மேலும்..

63 சதவீதமானோர் காலநிலை மாற்றத்தை பூகோளத்தின் அவசர நிலையாக இனங்காண்டுள்ளனர் – நஸீர் அஹமட்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை பூகோளத்தின் அவசர நிலையாக இனங்கண்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர், யுவதிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் மக்கள் பிரநிதிகளின் பங்களிப்பு போதியளவில் இல்லை என்று ...

மேலும்..

யாழில். காந்தியின் 154 ஆவது ஜனதின நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற ...

மேலும்..

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்! சுகாஷ் தெரிவிப்பு

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, ஸ்ரீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்பு சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக ...

மேலும்..

மன்னாரில் மீன் வாடியிலிருந்து திருடப்பட்டுள்ள 9 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் மீட்பு!  திருடியவர் கைது

மன்னார் பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி மீன்பிடி உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். மன்னார் பள்ளிமுனையைச் ...

மேலும்..

பேசாலை மக்களின் காணிகளை கையகப்படுத்தலை இலங்கை மின்சார சபை உடன் நிறுத்த வேண்டும்! விசேட கலந்துரையாடல்

மன்னாரில் இலங்கை மின்சார சபை காற்றாலை அமைக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் மக்களின் காணிகளை, அவர்களின் சம்மதமின்றி தாங்கள் கையகப்படுத்துவதால் பேசாலை மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பேசாலை பங்குத் தந்தை அருட்பணி அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் இலங்கை ...

மேலும்..

யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ்மீது காட்டு யானை தாக்கு! அநுராதபுரத்தில் சம்பவம்

அநுராதபுரம் - தந்திரிமலை பிரதான வீதியின் மணிங்கமுவ - ஓயாமடுவ பிரதேசத்தில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை காட்டு யானை தாக்கியுள்ளது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலில் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையிலிருந்து அநுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற ...

மேலும்..

நாவிதன்வெளியில் யானை அட்டகாசத்தால் நெல் களஞ்சியசாலையில் பாரியளவு சேதம்

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி - சவளக்கடை பிரதேசத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள நெல் களஞ்சியசாலையை துவம்சம் செய்துள்ளன. மேலும், அங்கிருந்த நெல் ...

மேலும்..

சரத் வீரசேகரவினாலேயே முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறக் காரணம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் ...

மேலும்..