இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காகவே சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – தென்கொரியாவில் சுனின்ஹந்துநெத்தி

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயல்கின்றது என ஜேவிபியின் செயற்குழு உறுப்பினர் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்றுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளதால்  ...

மேலும்..

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – ஜனாதிபதியின் மௌனம் குறித்து ஹர்சா கருத்து

குருந்தூர் மலை உத்தரவிற்காகம மிரட்டல்களை எதிர்கொண்டதால்  நீதிபதி ரீ சரவணராஜா பதவி விலகினார் என வெளியாகும் தகவல்களால் நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சில பிரிவினரின் மிரட்டல்கள் மன ...

மேலும்..

தமிழர்கள் சொத்தாக குருந்தூர்மலையை பார்க்கிறோம் ; அங்குள்ள லிங்கமும் அதனையே உறுதிப்படுத்துகின்றது! ரவிகரன் ஆணித்தரம்

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்றைய தினம் (30) முல்லைத்தீவு ஊடக ...

மேலும்..

நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதை நீதி அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார் : வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமென சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவிப்பு

நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது கூற்றுக்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு பதவிநிலைகளை தூக்கியெறிந்து நாட்டை விட்டு வெளியேறியிருப்பதையிட்டு அரசாங்கம் வெட்கித் ...

மேலும்..

தனது ஆரூடம் பலித்துள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தவதற்கு செல்கின்றபோது அதனுடன் செய்யப்பட்டன உடன்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய சூழல் உருவாகும். அதனால் உள்நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆரூடமாக கூறியிருந்த நிலையில் தற்போது அவ்வாறான நிலைமைகளே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ...

மேலும்..

நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜரோப்பிய ஒன்றியம் அவதானம்

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத் தூதுவர் Tiina jortikka க்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துக் கொண்டதன் பின்னரே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் ...

மேலும்..

நீதிபதி பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்

நீதிபதி பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு உடனானடியாக நாடு திரும்பி பதிலளிக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு ...

மேலும்..

நீதிபதிக்கே கொலைமிரட்டல் என்றால் சாதாரண மக்களின் நிலை ? – சாணக்கியன் கேள்வி

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும் சனல் 4 இல் வெளியான தகவல்கள் ...

மேலும்..

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை – அம்பிகா சற்குணநாதன்

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்..

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்

நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையி;ல் செயற்படுகின்றதா என்ற கேள்வியெழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அவர், முறையான தீர்ப்பை வழங்கிய நீதிபதி அச்சுறுத்தப்பட்டதை வண்மையாக கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நீதித்துறை என்பது நியாயமான வகையில் ...

மேலும்..

தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுக்கும்!

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு அவசியம்” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார். கொழும்பு நீதிமன்ற வளாகத்திவ் இடம்பெற்ற நிக்லாவில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணிலுக்கே உண்டு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுவதாக நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும். 2024 ...

மேலும்..

நீதிபதியின் பதவி விலகலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் ...

மேலும்..

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை

  பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ...

மேலும்..

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான ...

மேலும்..