இலங்கை செய்திகள்

அரச மரத்தைக் கண்டாலே அஞ்சுகின்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்   ஜோன் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவிப்பு

சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

மருந்துக் கொள்வனவை நிறுத்தவும் நடவடிக்கை! சுகாதார அமைச்சர் கெஹலிய எகத்தாளப் பேச்சு

இந்திய கடன் உதவியின் கீழ் எமக்கு 237 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றது. அதற்கமைவாக இதுவரையில் 207 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளோம். இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கான மருந்துகளில் ஒரு மருந்து தரமற்றதாக இருக்கலாம். இருப்பினும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த ...

மேலும்..

யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து சென்ற வயோதிபர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயமடைந்த ...

மேலும்..

அரச மர விவகாரம்; யாழ் சுழிபுரத்தில் பாரிய போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் எனத்  தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ...

மேலும்..

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் விசேட குழு நியமனம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இந்த விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.

மேலும்..

”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ”இதன் ...

மேலும்..

சாதனைகள் மற்றும் அதிக வருவாயை ஈட்டும் மாகாணமாக கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு!

  அபு அலா - யானா நீச்சல் அக்கடமியில் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை வுசinஉழ யுனை நிறுவனம் 'மரைன் மைல் சலஞ்' எனும் தொனிப்பொருளில் பாக்கு நீரிணை கடப்பதற்கான இரண்டாவது நீச்சல் பயிற்சிப் போட்டியை கடந்த செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய புதிய அதிபராக எம்.ஏ.அஸ்தர் பொறுப்பேற்பு!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ ரியாழுல் ஜன்னா வித்தியாலய புதிய அதிபராக கல்முனை கல்வி வலய கல்முனை கமுஃகமுஃஅல்- பஹ்ரியா மகா வித்தியாலய பதில் அதிபராகவும் மற்றும் பிரதியதிபராகவும் கடமையாற்றிய இலங்கை அதிபர் சேவை தரத்தை உடைய ...

மேலும்..

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் கற்பித்தல் வெண்பலகை அறிமுகம்

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பெற்றோர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இலகு கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை குறுஞ்செய்திச் சேவை அங்குரார்பணமும், ஆசிரியர் கையேடு அறிமுகமும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் ...

மேலும்..

ஐ.நா.காரியாலய முன்றிலில் போராடிய காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பு!

  நூருல் ஹூதா உமர் காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காஷ்மீர் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னாலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய முன்றிலிலும் சனிக்கிழமை பதாதைகளை ஏந்திக் கொண்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கொழும்பு மாநகர சபை ...

மேலும்..

வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ நடை பவணி இன்று மிகிந்தலையில்

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்படும் நடைபவனி, இன்றைய தினம் மிகிந்தலை வரை இடம்பெறவுள்ளது. வவுனியா – செட்டிக்குளம் பகுதியிலிருந்து நேற்று காலை ஆரம்பமான இந்த நடைபயணம் நேற்று மதியம் ...

மேலும்..

கேரளாவில் விருது பெறும் இலங்கை குறும்படம்

இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Keralaவில், ஐம்பத்தி மூன்று குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக  “எல்லையற்று ...

மேலும்..

யாழில் மனைவியைப் பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கிய கணவன் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து ...

மேலும்..

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பரஸ்பர நீண்டகாலப் ...

மேலும்..

பிரதமர் தலைமையில் அம்பாறையில் மீளாய்வுக் கூட்டம்!

‘புதிய கிராமம்-புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை ...

மேலும்..