இலங்கை செய்திகள்

செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்குஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட ...

மேலும்..

நெல்லின் விலை தொடர்பில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

உரிய நேரத்தில் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அமுல்படுத்தப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது. கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து ...

மேலும்..

உணவு விஷமடைந்தமையால் 40 மாணவர்கள் சுகவீனம்!

உணவு விஷமடைந்தமையினால் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்து மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த மாணவர்கள் உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்..

நலன்புரிக் கொடுப்பனவுகளில் காணப்படும் குறைபாடுகளை நீக்க நடவடிக்கை : திலீபன்

நலன்புரிக் கொடுப்பனவுகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடித் தீர்மானமொன்று எட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நலன்புரிக் ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் யுவதியின் தலையில் தாக்கிய போதைப்பொருளுக்கு அடிமையானவர் பிலியந்தலையில் கைது!

கூரிய ஆயுதத்தால் யுவதி ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதியின் தலையில் சந்தேக நபர் கத்தியால் தாக்கும் காட்சி சிசிரிவியில் பதிவாகியிருந்தது. 19 வயதுடைய யுவதியே ...

மேலும்..

ஹங்குரான்கெத்தவில் இளைஞர் தலையில் தாக்கப்பட்டுக் கொலை : 8 பேர் சந்தேகத்தில் கைது!

ஹங்குரான்கெத்த உடவத்தகும்புர பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற காணித் தகராறில் குறித்த இளைஞர் ...

மேலும்..

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் காரில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற வீதியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, ...

மேலும்..

அரசின் தேசிய கடன் மறுசீரமைப்பின் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன? ரஞ்சித் மத்தும பண்டார கேள்விக்கணை

உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கூட ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதில்லை. அவ்வாறிருக்கையில் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் எதற்காக இவ்வாறு வழமைக்கு மாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது? இதன் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன என ஐக்கிய மக்கள் சக்தி ...

மேலும்..

அஸ்வெசும போராட்டத்துக்கு மத்தியில் தேசிய கடனை மறுசீரமைக்க முயற்சி!  உதய கம்மன்பில கூறுகிறார்

சர்வதேச பிணைமுறி  வழங்குநர்களின் கோரிக்கைக்கு அமையவே அரசாங்கம் தேசிய கடன்களை மறுசீரமைக்கத் தீர்மானித்துள்ளது. தேசிய கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய ...

மேலும்..

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும்! கனடா தமிழர்களைக் கோரும் அந்நாட்டுக்கான தூதரக அதிகாரி

இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம்வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் ஸ்கார்புரோவில்  உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரகஅதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கனடாவின் மாகாண ...

மேலும்..

சிவில் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவுக்கு பிணை!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 'அரகலய' போராட்டத்தின் போது முக்கிய செயற்பாட்டாளரான செயற்பட்ட  பியத் நிகேஷலா திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கத்துக்கு  எதிரான ...

மேலும்..

போலி மாணிக்கக் கற்களை கொடுத்து நகைகள் மோசடி! களுத்துறையில் ஒருவர் கைது

போலி மாணிக்கக் கற்களைக் காட்டி மக்களை ஏமாற்றி  தங்க நகைகளைப் பரிமாறிக்கொண்ட மூன்று பேர் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின்  பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். மெட்டியகொட, நிந்தன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது ...

மேலும்..

கடன் மறுசீரமைப்புக்கு இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்!  பிரதமரிடம் சீனா உறுதி

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கை முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ ஷென்ஹொங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே சீனத்தூதுவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். பொருளாதாரப் ...

மேலும்..

ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அவசியமா? ஜனநாயகத்துக்குப் பாரியதொரு அச்சுறுத்தல்!  பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஊடக ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் அவசியமா? குறிப்பாக அண்மையில் கொண்டு வரப்படவிருந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் கூட ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் இருந்தன. இந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த திட்டமிடும் போது ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு ...

மேலும்..

அரசின் கடன் மறுசீரமைப்பு குறித்து தெரிவிக்கப்படும் பொய் பிரசாரங்கள் தொடர்பில் அச்சப்படவேண்டாம்!  அகிலவிராஜ் கூறுகிறார்

தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம் வங்கிகளுக்கோ பணம் வைப்பில் வைத்திருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பாக தெரிவிக்கப்படும் பொய் பிரசாரம் தொடர்பில் யாரும் அச்சப்பட தேவையயில்லை என ஐக்கிய தேசிய கட்சி உப தவைலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும்..