இலங்கை செய்திகள்

2009 இல் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நடத்தையை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்காh!; பிரிட்டனில் அண்ணாமலை காட்டம்

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டள்ள அவர், இந்தியா தலையிட்டு யுத்தத்தை தடுத்திருக்கலாம் எனவும் ...

மேலும்..

அரசுக்குப் பாரிய நெருக்கடி ஏற்படும் பங்காளியான சந்திரசேன எச்சரிக்கை

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். குறைபாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிடின்  அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று(27) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன்மற்றும் கோவிந்தன் ...

மேலும்..

மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தானங்களிலே சிறந்த ...

மேலும்..

வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் நிலவும் வளப்பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். குறித்த கல்வியியல் கல்லூரியில் காணப்படும் வளப்பற்றாக்குறை குறித்து அக் கல்லூரியின் பீடாதிபதி குணரட்ணம் கமலகுமார் தலைமையிலான குழுவினர் திலீபனுக்கு சுட்டிக்காட்டிய போதே அவர் ...

மேலும்..

இலங்கை புவிசார் அரசியல் போட்டியில் சிக்குண்டுள்ளது – சீனா தொலைக்காட்சிக்கு நாமல் பேட்டி

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். சீனாவின் அரசதொலைக்காட்சியான சிஜிடிஎன்னிற்;கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்த இலங்கையின் ஆர்வம் குறித்து நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியிலான உறவுகளை ...

மேலும்..

தென்மராட்சி பிக்பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி சம்பியன்!

யாழ்.தென்மராட்சியை மையப்படுத்தி நடத்தப்பட்ட தென்மராட்சி பிக் பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி தனதாக்கிக் கொண்டது. 10அணிகள் பங்குபற்றிய மென்பந்து துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழiமை மட்டுவில் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதிப்போட்டியில் மட்டுவில் ...

மேலும்..

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜுலை 13 இல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஜூலை 13ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ...

மேலும்..

சட்டவிரோத மண்அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு பிள்ளையான் கோரிக்கை!

மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் ...

மேலும்..

மகாவம்சம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு !

யுனெஸ்கோ “மகாவம்சத்தை” உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மகாவம்சம் என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைக்கப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் ...

மேலும்..

ஹங்குரன்கெத்த பொலிஸுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்துக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். திங்கட்கிழமை (26) இரவு 10 மணியளவில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் முன் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோதே வானத்தை நோக்கி ...

மேலும்..

இந்தியா, பாகிஸ்தான் மாத்திரமல்ல பங்களாதேஷுடனும் வர்த்தக உறவுகளை இலங்கை வைத்திருக்க வேண்டும்! நிமல் சிறிபால டி சில்வா திட்டம்

இந்தியா,  பாகிஸ்தான் மாத்திரமல்ல பங்களாதேஷுடனும்  நாம் வர்த்தக உறவுகளை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். சில நிபந்தனைகள் அடிப்படையில், கொழும்பு துறைமுகத்தில் குறித்தவொரு இடத்தை பங்களாதேஸுக்கு வழங்குவதற்கு தான் இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்பமுடியும் ருவன் விஜேவர்த்தன தெரிவிப்பு

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு. அதனால் வங்குரோத்து அடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஓரிரு வருடங்களில் கட்டியெழுப்ப முடியாது. என்றாலும் தற்போதுள்ள நிலைமையில் ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன ...

மேலும்..

பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி முகாமைத்துவ பயிற்சித் திட்டம்!

  நூருல் ஹூதா உமர் தடுப்பூசிகளை திறம்பட நிர்வகிப்பதில் பொது சுகாதார பரிசோதர்கள் மற்றும் பொது சுகாதார மாதுக்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசி முகாமைத்துவம் தொடர்பான விரிவான பயிற்சித்திட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிராந்திய தொற்றுநோய் ...

மேலும்..

நேர்மையான சேவைக்கு பாராட்டும் கௌரவிப்பும்!

நூருல் ஹூதா உமர் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு கல்முனை மாநகர சபையின் பிரதான திண்ம கழிவகற்றல் செயற்திட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்து முழு ஈடுபாட்டுடன் இரவு பகல் பாராது நேர்த்தியான முறையில் தனது சேவைகளை வழங்கி வரும் சுகாதார மேற்பார்வையாளர் எம்.எம். ...

மேலும்..