இலங்கை செய்திகள்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் புதிய தலைவராக மஞ்சுளா பெர்னாண்டோ!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...

மேலும்..

தீர்வுகாண முடியாத தலைவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை : ஐக்கிய தேசியக் கட்சி!

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் மீள்புனரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

பொருளாதார வளர்ச்சியை தனிப் பெறுமானத்திற்கு கொண்டு வர நடவடிக்கை : அமைச்சர் நளின்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

(க.கிஷாந்தன்) கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 23.06.2023 காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், 23.06.2023 அன்று மதியம் 2 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் ...

மேலும்..

வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்

பொது சந்தை வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் முதல் ...

மேலும்..

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலியாவுக்கு வழங்க தீர்மானிக்கவில்லை – மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சு

இலங்கை மின்சார சபை இன்றளவில் அரச வங்கிகளுக்கு 516 பில்லியன் ரூபா கடனாளியாக உள்ளது. ஆகவே மின்சார சபையை மறுசீரமைப்பதை தவிர மாற்று வழியேதும் கிடையாது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலிய நிறுவனத்தக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிடும் விடயம் அடிப்படையற்றது. நீர் ...

மேலும்..

50 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன் ஆளுநராக நியமிக்கப்பட்டமை முறையற்றது – இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரித்த இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 200 வருட கால வரலாற்று பின்னணியை மலையக மக்கள் பூர்த்தி செய்துள்ள போதும் துயரங்களில் இருந்து விமோசனம் கிடைக்கவில்லை என ஐக்கிய ...

மேலும்..

கோட்டாவின் ஆட்சியில் நாடு 9 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றுள்ளது – ஹர்ஷ டி சில்வா

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில் கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி ...

மேலும்..

எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்பட எவருக்கும் இடமில்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதற்கு எவருக்கும் முடியாது. அதேநேரம் மத விடயங்களில் மதத் தலைவர்கள் நல்ல வசனங்களை பேசியும், நல்லிணக்கம், ஒழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) ...

மேலும்..

அரசின் வரி அதிகரிப்புக் கொள்கைகள் வேறு விளைவுகளுக்கு வழிசமைக்கும்! ஹக்கீம் சுட்டிக்காட்டு

  ஊழியர்களிடமிருந்து ஒருலட்சம் ரூபா வரி அதிகரிப்பை அரசாங்கம் ஓர் எதிர்பார்ப்பை நோக்கி செயற்படுத்தினாலும் அது வேறுவிதமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. அதனால் அரசாங்கம் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது வரியைக் குறைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கம் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் செயல்! விநோனோகராதலிங்கம் காட்டம்

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார். இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள ...

மேலும்..

தொல்பொருள்கள் மரபுரிமைகள்மீது கைவைப்பதை தவிர்த்துக்கொள்க! சரத் பொன்சேகா அறிவுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹிட்லரை போல் செயற்பட முயற்சிப்பது கவலைக்குரியது. அரசியல் நோக்கத்துக்காக தொல்பொருள் மரபுரிமைகள் மீது கை வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவு ஏற்படும். நாட்டை சீரழித்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் ...

மேலும்..

புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்குண்ட யானை சடலமாக மீட்பு

புத்தளம் மஹாகும்புக்கடவல பிரதேசத்தின் கவயாங்குளம் பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு யானை உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று யானையைப் பார்வையிட்டுள்ளனர். குறித்த யானை மின்சாரவேலியில் சிக்குண்டு ...

மேலும்..

முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ! மக்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் – அரச அதிபர்

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க உள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட நடமாடும் சேவை ஒன்றும் ...

மேலும்..

இவ்வாண்டில் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைகழக மாணவர்களில் ஐவர் தற்கொலை – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களில் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..