இலங்கை செய்திகள்

2025 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர கலை வர்த்தகப் பிரிவு மாணவிகளுக்கு வரவேற்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி  (தேசிய பாடசாலை) யின்  2025 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றும் உயர்தர கலை, வர்த்தகப் பிரிவு மாணவிகளை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு   2024 உயர்தர சிரேஷ்ட மாணவிகளின் ஏற்பாட்டில் கல்லூரியின் சேர் ராசிக் பரீட் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட செயலாளரால் பிரதேச செயலருக்கு கௌரவிப்பு

(சர்ஜுன் லாபீர்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணத்தில் உருவான உரித்து  தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச காணிகளை நிபந்தனையற்ற ரீதியில் சுதந்திரமான முறையில் பூரண உரிமையாக அளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் தம்புள்ளையில் இடம்பெற்றது. இதில் அகில இலங்கை ரீதியாக சம்மாந்துறை பிரதேசம் முதலிடம் ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நூலகக் கற்றல் வள நிலையம் திறப்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) 'ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' எனும் கூற்றுக்கமைய புனரமைக்கப்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) நூலகமானது  'அறிவுத்தேடலுக்கு முதலிடம்' எனும் தொனிப்பொருளில் கல்லூரியின் நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம்  தலைமையில் மிக சிறப்பான நெறிப்படுத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

சக்கர நாற்காலி வழங்கிவைப்பு!

  (மூதூர் நிருபர்) மூதூர் பிரதேச செயலகத்தால் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சக்கர நாற்காலி விசேட தேவையுடையோருக்கு இன்று (வியாழக்கிழமை) மூதூர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.பிரசாந்தனால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்..

பாடசாலை கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் மாணவர் வரவேற்பு வைபவம்

( மூதூர் நிருபர்) மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃ மூஃ புர்கானியா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்விக்கு மகிழ்ச்சி கரமான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் தரம் 1 இற்குப் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளுவதற்கான ஆரம்ப வரவேற்பு விழா பாடசாலை அதிபர் ஏ.எச்.இம்ராம் தலைமையில் இன்று ...

மேலும்..

ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கடற்றொழில் வரைவு வருமாம்! உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் டக்ளஸ் உறுதி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் இன்று (வியாழக்கிழமை)இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் - இலங்கை கடற்றொழில் சமூகத்தை ...

மேலும்..

மருதமுனை அல் – ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் வித்யாரம்ப விழா

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை அல் - ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் வித்யாரம்ப விழா நிகழ்வு இன்று (புதன்கிழமை) பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.மஹ்றூப் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தரம் ஒன்று மாணவர்களின் ...

மேலும்..

மூதூர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் விழா

(கிண்ணியா நிருபர்) மூதூர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தரம் - 01 மாணவர்களை வரவேற்கும் விழா இன்று (வியாழக்கிழமை) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கே.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலை அபிவிருத்தி மேம்பாட்டு அதிகாரி எஸ்.எம்.நௌபர் கலந்து கொண்டார். அத்தோடு பாடசாலை ...

மேலும்..

தாருல் உலூம் ஆரம்ப பாடசாலைக்கு  கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

. சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட தாருல் உலூம் ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காகவும், தங்குவதற்கு வகுப்பறைக்கான தளபாட வசதிகள் இன்றி காணப்பட்டது. குறித்த பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க 40 அலகுகள் கொள்வனவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பறை தளபாடங்கள் மேசை, ...

மேலும்..

வவுனியாவில் பிரதேச செயலக பிரிவில் 1728 தாய்மாருக்கு பால் மா பொதிகள்

வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1728 தாய்மாருக்கு பால் மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலகத்தினர் தெரிவித்தனர். வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பால்மா பொதிகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும்நிலை இன்னும் நீங்கவில்லை! மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் சபையில் விசனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு - 'இந்த நாட்டின் பொருளாதாரம் ...

மேலும்..

பெண் விரிவுரையாளர் விபத்தில் பரிதாப சாவு!

  தலவத்துகொட விக்கிரமசிங்கபுர சந்தியில் வீதியைக் கடந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீட உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்துக்கு அருகிலிருந்த சிசிடிவி கமெராவில் சம்பவம் பதிவாகியுள்ளது. உதவி விரிவுரையாளர் வெள்ளைக் கோட்டில் ...

மேலும்..

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) பாடசாலை பகுதி தலைவர் டி.கே .எம். மௌஸீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு ...

மேலும்..

செல்வநகர் திஃமூ.அந்நூர் வித்தியாலய புதிய மாணவர்களை இணையும் விழா!

(மூதூர் நிருபர்) மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃ மூஃ செல்வ நகர், அந்நூர் வித்தியாலயத்தில் பாடசாலைக்கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் தரம் 1 இல் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளுவதற்கான வரவேற்கும் வைபவம் பாடசாலை அதிபர் கே.எம்.எம்.றிஸ்மி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது. இதில் ...

மேலும்..

சாய்ந்தமருது எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய வித்தியாரம்ப விழா!

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது லீPடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று(வியாழக்கிழமை) கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது பாரம்பரியக் கலையான சாய்ந்தமருது முஹம்மதியா கலைமன்ற கோலாட்டக் கலைஞர்களின் கோராட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலைகளால் அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மயோன் குரூப்பின் முகாமைத்துவப் ...

மேலும்..