May 22, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னாரில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை : சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக ...

மேலும்..

கனடாவின் கருத்துக்கு ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன் ? – மக்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு ...

மேலும்..

யாழ். பல்கலை பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதியுங்கள் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பணிப்புரை

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் ...

மேலும்..

மன்னிப்பு கேட்பதன் மூலம் ஜெரோம் பெர்னாண்டோ தப்பமுடியாது – டிரான் அலஸ்

மன்னிப்பு கேட்பதன் மூலம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தப்ப முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அவர் மன்னிப்பு கோரியதால் அவருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காமலிருக்கப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். யாராவது தவறிழைத்துவிட்டு மன்னிப்பு கோரினால் அதற்காக நாங்கள் ...

மேலும்..

மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – வடக்கு ஆளுநரிடம் அவைத் தலைவர் கோரிக்கை

மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை கொண்டுவர ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக ...

மேலும்..

எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாக்க சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் ...

மேலும்..

மருத்துவ மாதுக்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

மத்திய சுகாதர அமைச்சால் கிழக்கு மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 5 பொது சகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ...

மேலும்..

முப்பெருந் தமிழ் விழா யாழில் சிறப்புற நடந்தது!

யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தை முன்னிட்டு முப்பெருந்தமிழ் விழா இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இந்த விழப இடம்பெற்றது. பிரதம விருந்தினர்களாக ...

மேலும்..

வட்டுக்கோட்டை வயலுக்குள் பாய்ந்தது இ.போ.சபை பஸ்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைபகுதியில் உள்ள வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை, பயணித்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது. அதிஷ்டவசமாக இ.போ.ச. பஸ் பயணிகள் சேவையில் ஈடுபடாத ...

மேலும்..

ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.!

கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இந்தக் கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு ...

மேலும்..

எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலென்றால் ஓர் அடி கூட நான் பின்வாங்க மாட்டேன்! அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ...

மேலும்..

சுதந்திரமுன்னணியின் பொதுசெயலர் விவகாரம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறக்கை வெளியீடு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சர் மஹிந்த அமரவீரவை அல்லது திலங்க சுமதிபாலவை சுதந்திர முன்னணியின் பொதுச் ...

மேலும்..

நெதர்லாந்து நிறுவனங்ளும் முதலீட்டாளர்களும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம்!  மகிழ்ச்சி தெரிவித்தார் நெதர்லாந்து தூதுவர்

நெதர்லாந்து நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இலங்கைக்கு வந்து, இலங்கை நிறுவனங்கள் மற்றும் இலங்கையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் ஆர்வமாக இருக்கின்றனர். இது தொடர்பாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோபேக் கூறியுள்ளார். கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, ...

மேலும்..

இரண்டாங்கட்ட டெங்கு ஒழிப்பு கல்முனையில் வேலைத் திட்டம்!

ஜனாதிபதியின்  டெங்கு காட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை  மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பையால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாங்கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம்  நேற்று கல்முனை  வடக்கு  பிரதேசத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யு. எம். ...

மேலும்..

கல்முனையில் தொழுநோய் பரிசோதனைகள் சிகிச்சைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம். பசாலால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ...

மேலும்..

தனது சாதனைகளை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு

தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் அமைச்சராகத் தான் சில பணிகளை நிறைவுசெய்தார் எனவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான ...

மேலும்..

மட்டு. நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்த கரங்கள்  அமைப்பால்  ஆயித்தியமலை மட்ஃ நரிப்புல்  தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை பாடசாலையின் அதிபர் வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பை ...

மேலும்..

கென்யோன் நீர்த் தேக்கத்தில் சுத்திகரிப்புப் பணிகள் தீவிரம்!

கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் லக்ஸபான நீர் மின் நிலைய மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் கென்யோன் நீர்த் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி ...

மேலும்..

ஹெம்மாத்தகம நீர்த் திட்டத்தின் மூலம் 60வீத மக்களின் குடிநீர்த்தேவை பூர்த்தி! அமைச்சர்கள் கருத்து

ஹெம்மாத்தகம நீர்த்திட்டத்தின் மூலம் சுமார் 60 வீத மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அரச சொத்துக்களை இடித்து சேதப்படுத்தினாலும், இதுபோன்ற பாரிய திட்டங்களை பெற்றுக்கொள்ளவே போராட வேண்டும் என்றும் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த திட்டத்துக்காக ...

மேலும்..

திருகோணமலையில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல் தீவு மற்றும் ஆனந்தகுளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்துக்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் ...

மேலும்..

அரசால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைக்கவேண்டும்! ‘மலையகம் 200’ நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள்

மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்பட்டு, ஏனைய சமூகங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரான பீ. கௌத்தமன் தெரிவித்தார். நுவரெலியாவில் கடந்த மூன்று ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக நாட்டை நிர்வகிக்கிறார்! ரோஹித அபேகுணவர்தன புகழாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்கிறார். ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வெகுவிரைவில் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ...

மேலும்..