February 20, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஈரான் வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் தினேஷ் பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரச முறை விஜயத்தை மேற்கொண்டுள்ள ஈரான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொஸ்ஸய்ன் அமீர் - அப்துல்லாஹியான் பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று செவ்வாய்க்கிழமை  (20) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும்..

200 பேர் பயணிக்கும் வகையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட கப்பல் வெள்ளோட்டம் !

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது. 80 அடி நீளமும், 30 அடி அகலமும், ...

மேலும்..

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது! – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். உத்தேச கடற்றொழில் சட்டத்தின் ஊடாக மீனவ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் ...

மேலும்..

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு விஜயம்!

  (எஸ்.அஷ்ரப்கான்) பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கும் வலுவூட்டலுக்கும் பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயரிய சிந்தனையின் கீழ் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் அனுமதியுடன் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கலை கலாசார ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை இரண்டு நாட்களாக தோண்டியும் ஏமாற்றம்

முல்லைத்தீவு,  கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற ...

மேலும்..

தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு

  இன்றைய நவீன உலகை வெல்வதற்கு கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும், தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கும் தொழில் கல்வி என்பது மிக முக்கியமாகும். எனவே, இங்கு வந்துள்ள அனைத்து மாணவர்களும் தமது தொழில் கல்வியை முறையாக ...

மேலும்..

மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சிவில் சமுகப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வடக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துடையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள திருமறை கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ...

மேலும்..

சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட நால்வர் மத்ரஸா மாணவன் மர்ம மரணம் குறித்து கைது

  பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை கல்முனை ...

மேலும்..

கல்முனை வலயப் பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் நூல் விநியோகம்

  பாறுக் ஷிஹான் கல்முனை வலயப் பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரது பங்கேற்புடன் நடைபெற வேண்டுமென்ற கல்வியமைச்சின் பணிப்புரைக்கமைய கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனைத் ...

மேலும்..

சாளம்பைக்குளம் றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா!

  வவுனியா, புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா கடந்த சனிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை ...

மேலும்..

எமது பிள்ளைகளை காணாமலாக்க செய்தோர் அழிந்துபோய் நாடு கடத்தப்படுதல் வேண்டும்!

  எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் அழிந்து நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டனர். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவிலேயே இவ்வாறு வேண்டுதலில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலை இஸ்லாம் கற்கை திணைக்களத்துக்குப் புதிய தலைவர்!

  நூருல் ஹூதா உமர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின்; இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்துக்கு புதிய திணைக்களத் தலைவராக இன்று (செவ்வாய்க்கிழமை)முதல் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம். முகம்மட் நபீஸை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் ...

மேலும்..

சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம்

ஒவ்வொரு ஆண்டும்  பெப்ரவரி மாதம் 20 திகதி “உலக சமூக நீதி தினமாக” அனுசரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு 2009-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழர்களின் உரிமைகளை உள்ளடக்கிய சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்கிழமை (20) நுவரெலியா ...

மேலும்..

விளக்கமறியல் கைதியை பார்வையிடச் சென்ற நபரின் சொக்லெட் பொதிக்குள் புகையிலை துண்டுகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காகச் சென்ற ஒருவர், தான் கொண்டு வந்த  சொக்லெட் பிஸ்கட் பொதிக்குள் மிகச் சூட்சுமமான முறையில் புகையிலை துண்டுகளை மறைத்து  வைத்திருந்த நிலையில்  கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி ...

மேலும்..

யாழில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்ரமசிங்கவை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ...

மேலும்..

பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் டீ சேர்ட் அறிமுக விழா சம்மாந்துறையில்!

(சர்ஜுன் லாபீர்,எல்.எம் நாஸீம்) சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்னோம்பல் அமைப்பால் புதிய டீ சேர்ட் அறிமுகம் செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை பிரதேச செயலக நலன்னோம்பல் அமைப்பின் தலைவரும், பிரதேச செயலாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச செயலக முன்றிலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை ...

மேலும்..

55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டு பிராண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கல்! ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில்

(அஸ்ஹர் இப்றாஹிம்) கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டது. பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..