கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மாயம்..! அவசர உதவி கோரல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளார்.

48 வயதுடைய சிங்காரவேலன் செல்வக்குமார் என்பவரே காணாமல் போயுள்ள நிலையில், குடும்பத்தினரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இவர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை முதல் காணாமல் போயுள்ளார்.

உறவுகள் இவரை இதுவரை தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 0769107868, 0776916652 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.