வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதி
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நெடுங்கேணி, ஒலுமடு, நைனாமடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை கடந்த 25 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.இதனடிப்படையில், கொரோனா தொற்றாளர்களுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த நெடுங்கேணியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றையும, இரு உணவங்களையும், நைனாமடுவில் உள்ள ஒரு உணவகத்தையும், ஒரு பலசரக்கு விற்பனை நிலையத்தையும் தவிர, ஏனைய வர்த்தக நிலையங்களை நாளை காலை தொற்று நீக்கம் செய்த பின்னர் மதியத்திற்கு பின் திறக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
பூட்டப்பட்டுள்ள 5 வர்த்தக நிலையத்திலும் கடமையில் இருந்தவர்களுக்கு இரண்டாம் கட்ட பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அதன் முடிவைப் பொறுத்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நெடுங்கேணியில் உள்ள மதுபானசலை மற்றும் இரு தவறணைகளையும் தொடர்ந்தும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை