மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.