75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கையில் உள்ள அனைத்து தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி 75ஆவது சுதந்திர தினத்தில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை தயாரிக்கவும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை தொடர்பு கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.