மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அலுவலகத் தொகுதி திறப்பு விழா!!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அலுவலகத் தொகுதி திறப்பு விழா 12/11/2022 சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு கல்லூரியின் முதல்வர் திருமதி லலிதாமலர் முகுந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது

 

ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க செயலாளர் க.ஜெகநாதன் மற்றும் பிரான்சில் வசிக்கும்  க.லோகேஸ்வரன் குடும்பம் ஆகியோரின் 40 இலட்சம் நிதி அனுசரணையில் 20×20 அடி நீளம் கொண்ட அலுவலக தொகுதி அமைக்கப்பட்டு விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க.மகேசன் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன்
ஐக்கிய இராச்சியம் பழைய மாணவர் சங்க செயலாளர் க.ஜெகநாதன் பழைய மாணவி திருமதி மகேஸ்வரி கனகசுந்தரம் அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்

விருந்தினர்கள் நினைவுச் சின்னம் வழங்கியும் நன்கொடையாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.