டயானா கமகே தொடர்பில் மன்னர் சார்லஸிடம் முறைப்பாடு
இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே இந்த நாட்டிலும் பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
‘எஸ்.எல். தேசய’ யூடியூப் சனலை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட மற்றும் சிலர் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்ததுடன், அவர்கள் இன்று (28) பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்று கடிதத்தை கையளித்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான டயானா கமகே
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
பிரித்தானிய பிரஜையான டயானா கமகே சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு இலங்கை பிரஜை போல் நடித்து அரச பதவிகளை வகித்து தேர்தலில் போட்டியிடுவது இந்நாட்டு சட்டத்துக்கும் எதிரானது.
சார்லஸ் மன்னர் விசாரிக்க வேண்டும்
பிரித்தானிய சட்டத்தின்படி, சார்லஸ் மன்னர் அவரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வீசா காலாவதியான திருமதி டயானா கமகே தற்போது சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை