யாழில் இராண்டாவது நபருக்கும் கொரோனா – இலங்கையில் இதுவரை 146 பேருக்குத் தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மருதானை, குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய இன்று (01) பிற்பகல் 5.00 மணிக்கு தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 143 இலிருந்து 146 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (01) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (31) மிகக் கூடுதலாக 21 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 146 பேரில் தற்போது 126 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் வைத்தியசாலைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.