இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 185 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மட்டும் இதுவரை 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, 04 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 42 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 06 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஏனைய 137 நோயாளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் மேலும் 255 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.