இன்று ஒருவருக்குத் தொற்று; 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு * 134 பேர் சிகிச்சையில் * 242 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 189 இலிருந்து 190 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 44 இலிருந்து 49 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாவின் தாக்கத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 134 நோயாளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே வைத்தியசாலைகளில் மேலும் 242 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.