இன்று ஒருவருக்குத் தொற்று; 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு * 134 பேர் சிகிச்சையில் * 242 பேர் கண்காணிப்பில்
இலங்கையில் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 189 இலிருந்து 190 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 44 இலிருந்து 49 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 134 நோயாளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே வைத்தியசாலைகளில் மேலும் 242 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை