கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 6 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 2ஆயிரத்து 41 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான மேலும் 672 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை