தமிழ்த் தேசியக் கொள்கையுடன் மக்கள் வளர்க்கப்பட வேண்டும் – சுப்பிரமணியம் சுரேன் தெரிவிப்பு…

தமிழர்களின் உரிமையை வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் பயணிக்கும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் எமது மக்கள் கடந்த தேர்தலில் எமக்கு ஒரு செய்தியை கூறி இருக்கிறார்கள்  தமிழர்களின் உரிமைக்காக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்குள் காணப்படும் உள்ளக உறுதித்தன்மயை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.
எனவே நாம் தென்இலங்கை அரசியலை புரிந்துகொண்டு அங்கு மக்களை எவ்வாறு சிங்கள தேசியவாத கொள்கைகளோடு மகிந்த அரசு  கட்டி வளர்க்கிறதோ அதே போல் நாமும் தமிழ்த் தேசிய சிந்தனைகளுடன் மக்களை கட்டிவளர்க்க  ஒன்றுபடவேண்டும் வெறுமனே பதவிகளுக்காகவும்  தேர்தல் நோக்கிய அரசியலை முன்னெடுப்போமேயானால் எமது இனம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது எனவே இந்த நிலமையை புரிந்து கொண்டு தலைவர்கள் பயணிக்க முன்வரவேண்டும் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.