சேருவில கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்து

சேருவில கண்டி பிரதான  வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் கைக்கிலில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(5) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாயில் இருந்து மாட்டுப்பட்டிக்குச் சென்ற 21 வயதுடைய எம்.எம்.இல்ஹாம் இன்ற இளைஞரே காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேருவில சமகிபுர சந்தியிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு வாகனங்களும் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதியும் மற்றொருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.