மருதமுனை பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று இல்லை-பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது…

மருதமுனை பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.
அம்பாறை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் என  கண்டுபிடிக்கப்பட்ட இரு  கம்பஹா ஆடைதொழிற்சாலை பணியாளர்களை அழைத்து வந்த பஸ் நடத்துநர் உட்பட  அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரை நேற்று  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தனர்.
இதற்கமைய இன்று (7) மாலை   இப்பரிசோதனையின் படி  நெகடிவ் முடிவு  வெளியாகியதாக சுகாதார பிராந்திய முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.