வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் கோவிட்-19 தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு…

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக  வன்னி இரானுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (10.10.2020) காலை 9.30 மணியளவில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மற்றும் நடைபாதைகள் போன்றவற்றிற்கு இரானுவத்தினரால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டது.


 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.