மாரவில மருத்துவமனையில் கொரோனா நோயாளர் பிரிவில் ஒருவர் மரணம்

குருநாகல் – மாரவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 61 வயது பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

தங்கொட்டுவ – மெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த 26ஆம் திகதி இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு கொரோனா சார்ந்த அறிகுறிகள் தென்பட்ட போதிலும் நேற்று உயிரிழக்கும் வரை அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.