கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் மூடல்; 10 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனா உறுதி – பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் தனிமைப்படுத்தல்…

கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் கொரோனா அச்சம் காரணமாக இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடலோரப் பொலிஸ் நிலையச் செயற்பாடுகள் தற்காலிகமாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.