தலை மன்னாரில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபர் உயிரிழப்பு.

தலை மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருந்து மன்னாருக்கு வந்த நிலையில், தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளாரென குடும்பத்தார் அறிவித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

76 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சடலம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.