யாழில் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்த கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே/ 257 கிராமசேவையாளர் பிரிவில் அடங்கும் சிங்கராஜ வைரவர் கோவிலடி (சிங்கராஜ வீதி பழைய வீடு யாரும் அற்ற பற்றைக்காணி) வேளாதோப்பு வீதி ,விநாயகர்வீதி மைதானத்தடி, புதியசெம்மணிவீதி குளத்தடி, போன்ற இடங்களில் பல சிறுவயதைக்கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாகவும் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்  குறித்த பிரதேசவாசிகள் ஒரு சிலரால் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் விற்பனை செயப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் செயற்பாட்டினால் எமது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறி ஆகும் ஆகவே போதைப் பொருட்பாவனையை எமது பிரதேசத்திலிருந்து முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என  கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.