கிளிநொச்சியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

கிளிநொச்சியில் கொரோனா சூழ்நிலையில் கடமைகளை இலகுபடுத்த பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
தற்போதைய கொரோனா இக்கட்டான நிலையில் கடமைகளை இலகு படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் உலக வங்கியின் நிதியில் covid 19 emergency response and health systems preparedness project மூலம் வழங்கப்படுகின்றது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 12பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் மோட்டார் போக்குவரத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.