யாழ் மாநகர அனுமதியின்றி அமைக்கப்பட்ட தனியார் காணிச் சுற்றுமதில் இடைநிறுத்தம்
மாநகரசபையின் 10 ஆம் வட்டாரம் ஆறுகால் மடம் பகுதியில் மழை நீர் வழிந்தோடும் வடிகாலை தடுத்து நிறுத்தும் வகையில் மாநகரசபையின் அனுமதி இன்றி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த தனியார் காணி சுற்றுமதில் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய நேரடிக் களவிஜயம் ஒன்றை கடந்த (30) மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையிலான – மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களான குழு மேற்கொண்டிருந்தது.
குறித்த விஜயத்தின் மூலம் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சுற்றுமதில் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
குறித்த கள விஜயத்தில் மாநகர பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர வேலைப் பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துக்களேதுமில்லை