புதுக்குடியிருப்பில் இருவருக்கு கொரோனாத் தொற்று

யாழ்ப்பாணம் கொரோனா ஆய்வு கூடத்தில் நேற்று(02) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 04 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.