கோறளைப்பற்று மத்தியில் இருவருக்கு கொரோனா; இதுவரை 395 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரைக்கும் 395 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதுடன் இங்கு கொரோனா வைரஸ் அதிகாரித்து வரும் நிலையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான்; தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 375 குடும்பம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரைக்கும் 395 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று புதன்கிழமை மாலை அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் ஏற்கனவே பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டாம் முறை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்; என்றும், மற்றையவர் முதன் முறையாக பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டவர் என்றும் இவர்கள் வாழைச்சேனை மற்றும் பிறைந்துறைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(ந.குகதர்சன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.