திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினருக்கும் கொரோனா வைபவத்தில் கலந்துகொண்ட மேலும் எழுவருக்கும் தொற்று

மாவனல்லை பிரதேசத்தில் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியர் உள்ளிட்ட 9 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த திருமண வைபவம் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம்பெற்றுள்ள போதும் இரண்டாவது நாள் மணமகனின் வீட்டில் நடத்தப்பட்ட வைபவத்தில் சுகாதார வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

குறித்த மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், திருமண வைபவத்துக்குக்  கொழும்பிலிருந்தும் சிலர் வந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளான மணப்பெண் உந்துகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள அதேவேளை மணமகன் கேகாலை மாவட்ட தொற்றாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மத்திய நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.