கல்முனை மாநகர சபை பட்ஜெட் மக்கள் பார்வைக்கு
கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அறிக்கை பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.
கல்முனை பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான அலுவலகத்தில்
கடந்த திங்கட்கிழமை (02) தொடக்கம் வைக்கப்பட்டுள்ள இவ்வரவு செலவுத் திட்ட அறிக்கையை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் பொது மக்கள் பார்வையிடலாம்.
அத்துடன் இவ்வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மேயர் றகீப் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை