கொரோனா’ தொடர்ந்து பரவுவதற்கு அரசின் தவறான முடிவுகளே காரணம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு

இலங்கை அரசின் தவறான முடிவுகளே நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவுவதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்படும் தருணத்தில் நான்காவது அலை உருவாகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருமளவானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாததை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தற்போது பின்பற்றும் நடைமுறைகள் காரணமாக மேலும் பலர் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.