தற்போது ஏற்படும் கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மீளாய்வு செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

தற்போது ஏற்படும் கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மீளாய்வு செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் சுகாதார அமைச்சு இதனை செய்யவில்லை என்றால் அதன்பின் ஏற்படும் கொரோனா மரணங்களுக்கு சுகாதார அமைச்சு பொறுப்பேற்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

வீட்டுக்கு உள்ளேயே 7 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும். இந்த மரணங்களுக்கும் மினுவாங்கொட, பேலியகொட தொற்றிற்கும் தொடர்பு உள்ளதாக என்பது வௌிப்படுத்தப்பட வேண்டும்.

சுகாதார அமைச்சு இதனை கட்டாயம் செய்ய வேண்டும். அப்படி இன்றேல் அனைத்து மரணங்களுக்கும் சுகாதார அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும் என ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.