பாடசாலை மீளத் திறக்கப்படும் திகதியை அறிவித்தது அரசாங்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், இரண்டாம் தவணை விடுமுறைக்காகவும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார்.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

பாடசாலைகளை இன்று (9) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே மேலும் இரு வாரங்களுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர்மேலும் தெரிவித்தார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.