அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நடராஜா ரவிராஜ் ரவிராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில்        இன்றைய     தினம்(11)  இடம்பெற்றது.
அமரர் ரவிராஜின்உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்க பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வினை ஒரு அணியினர் காலை 9 மணிக்கும் சசிகலா ரவிராஜ் தலைமையிலான மற்றுமொரு அணியினர் 9.30  மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.